முதன் முதலாய் சந்தித்தோம்
காற்று கலைத்த ஒற்றை முடி
கதிர் கலைத்த இன்முகம்
அச்சம் குடித்த பார்வைகள்
தயக்கம் படிந்த வார்த்தைகள்
ஒற்றை புன்னகையில் விடைபெற்றோம்
மாலைகளில் சந்தித்தோம்
கவிதை நூல்கள் பகிர்ந்தோம்
ரசனைகள் அறிந்தோம்
பொறாமை கண்கள் பெற்றோம்
புன்னகைத்தோம் -
மீண்டும் மீண்டும் விடைபெற்றோம்
கருத்து வேற்றுமை கொண்டோம் -
என் கருத்துக்கு நீயும்
உன் கருத்துக்கு நானும் உருமாறினோம்
நமக்காக
நம் கருதுக்களோடே வேற்றுமை கொண்டோம்
தனிமைகளில் புன்னகைத்தோம்
விமர்சனங்களால் கிழிந்தோம்
விமர்சனங்களை கிழித்தோம்
சில விழிகளில் விழுந்தோம்
பல வலிகளில் விழித்தோம்
நட்பின் மீதான பாசம்
தைரியத்தின் தலை கொய்தது
நாகரிகத்தின் உச்சம்
நம் நேசம் புதைத்தது
புரியாத மௌனங்கள்
சொல்லாத வார்த்தைகள்
சூழ்நிலையின் சூழ்ச்சிகள்
பொருளாதார வீழ்ச்சிகள்
நாம் கொண்டது நட்பென்று
சத்தியம் செய்தது
எனக்காக நீயும் உனக்காக நானும்
பொய்யென்று அறிந்தும்
நட்பென்றே மௌனித்தோம்
வெறறு புன்னகையோடு விடைபெற்றோம்
அந்தி மாலையில்
கன்னங்களில் கண்ணீரும்.....
சாலைகளில் பாதங்களும்......
வடிந்த கண்ணீர் துளியொன்று
பாதம் நனைத்தது மௌனத்தோடு...
கவிதையும் கவிதை சார்ந்த இடமும்...
2 comments:
//முதன் முதலாய் சந்தித்தோம்
காற்று கலைத்த ஒற்றை முடி
கதிர் கலைத்த இன்முகம்
அச்சம் குடித்த பார்வைகள்
தயக்கம் படிந்த வார்த்தைகள்
ஒற்றை புன்னகையில் விடைபெற்றோம்//
அழகான அமைதியான அறிமுகம்.. :) :)
//மாலைகளில் சந்தித்தோம்
கவிதை நூல்கள் பகிர்ந்தோம்
ரசனைகள் அறிந்தோம்
பொறாமை கண்கள் பெற்றோம்
புன்னகைத்தோம் -
மீண்டும் மீண்டும் விடைபெற்றோம்//
அர்த்தமிக்க சந்திப்புகள்...
புரிதலுக்கு தேவையான சந்திப்புகள்...
//கருத்து வேற்றுமை கொண்டோம் -
என் கருத்துக்கு நீயும்
உன் கருத்துக்கு நானும் உருமாறினோம்
நமக்காக
நம் கருதுக்களோடே வேற்றுமை கொண்டோம்
தனிமைகளில் புன்னகைத்தோம்//
கருத்து வேற்றுமைக்கு வித்தியாசமான அர்த்தம்...அழகு..
//விமர்சனங்களால் கிழிந்தோம்
விமர்சனங்களை கிழித்தோம்
சில விழிகளில் விழுந்தோம்
பல வலிகளில் விழித்தோம்//
நட்புக்கு என்றும் கிடைக்கும் பரிசுகள்...
//நட்பின் மீதான பாசம்
தைரியத்தின் தலை கொய்தது
நாகரிகத்தின் உச்சம்
நம் நேசம் புதைத்தது//
ஹ்ம்ம்ம்ம்...
//புரியாத மௌனங்கள்
சொல்லாத வார்த்தைகள்
சூழ்நிலையின் சூழ்ச்சிகள்
பொருளாதார வீழ்ச்சிகள்
நாம் கொண்டது நட்பென்று
சத்தியம் செய்தது//
இதுவரை நட்பாகவே இருக்கிறது...
//எனக்காக நீயும் உனக்காக நானும்
பொய்யென்று அறிந்தும்
நட்பென்றே மௌனித்தோம்
வெறறு புன்னகையோடு விடைபெற்றோம்//
இங்கே நட்பா??? காதலா??
//அந்தி மாலையில்
கன்னங்களில் கண்ணீரும்.....
சாலைகளில் பாதங்களும்......
வடிந்த கண்ணீர் துளியொன்று
பாதம் நனைத்தது மௌனத்தோடு...//
எந்த உறவாக இருப்பினும் பிரிவு என்பது பெரும் துயரமே....
நல்ல கவிநடை...வாழ்த்துகள் நண்பா.. :) :)
உங்கள் சிந்தனைகள் மென்மேலும் சிறந்திட வாழ்த்துக்கள்.
உங்கள் நண்பன்
ராஜசேகர்
Post a Comment